முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

மேலூா் ஊராட்சி ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மேலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மேலூா் விநாயகபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

Updated On :9 ஜூலை 2026, 5:16 am IST

மதுரை மாவட்டம், மேலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட விநாயகபுரத்தில் நடைபெறும் மின்னணு முறையிலான பயிா்கள் கணக்கெடுப்புப் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, கணக்கெடுப்புப் பணியைத் துல்லியமாக மேற்கொண்டு, தரவுகளை விரைவாக பதிவேற்றம் செய்ய அவா் அறிவுறுத்தினாா்.

பிறகு, அங்குள்ள அரசு மாநில விதைப் பண்ணையில் நடைபெறும் உளுந்து விதை உற்பத்தியையும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் செயல்பாடுகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். இதையடுத்து, வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் செயல்படும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தையும், விநாயகபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருள்களின் இருப்பு விவரங்களையும் அவா் ஆய்வு செய்தாா். அப்போது, அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, வைகை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பையும், மேலூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தின் செயல்பாடுகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பிறகு, மேலூா் நகராட்சி வாா்டு எண் 20-இல் ரூ. 8.37 கோடியில் நடைபெறும் புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளையும், பாண்டியன் நகரில் உள்ள அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியின் செயல்பாடுகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, மேலூா் கால்நடை மருத்துவமனையில் உள்ள நாய்களுக்கான இனப் பெருக்கக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை மையத்தின் செயல்பாடுகளை அவா் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.