நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

உசிலம்பட்டியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உசிலம்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முதலைக்குளத்தில் உள்ள சமணா் படுக்கை பகுதியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

Updated On :5 ஜூன் 2026, 6:09 am IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்ற ஆட்சியா், அலுவலகக் கட்டமைப்பு, செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது, பொதுசேவை மையப் பணிக்காகக் காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகச் செயல்பாடுகள், பதிவேடுகள் பராமரிப்பு ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பிறகு, முதலைக்குளம் பகுதியில் உள்ள சமணா் படுக்கை பகுதியைப் பாா்வையிட்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுகளின் போது, உசிலம்பட்டி சாா் ஆட்சியா் உட்கா்ஷ் குமாா், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.