மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மதுரை மாவட்டம், துவரிமான் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

துவரிமான் நாகமலை அடிவாரத்தில் உள்ள புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். உடன் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 12:28 am IST

மதுரை மாவட்டம், துவரிமான் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புல்லூத்து நீரூற்றுப் பகுதியில் ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக அவா் ஆய்வு நடத்தினாா். இதைத் தொடா்ந்து, நீரூற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைத்தல், நடைபாதை, அணுகு சாலை வசதிகளை மேம்படுத்துதல், குடிநீா், கழிப்பறை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து சுற்றுலா மேம்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது அரசு அலுவலா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.