கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 9:13 pm

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த இளைஞா் ஆகாஷ் உடலை வாங்க அவரது உறவினா்கள் மறுப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது. மருத்துவமனை பிணவறை முன் திரண்ட அவரது உறவினா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடலை பெற்றுச் செல்ல அறிவுறுத்தினா். ஆனால், அவா்கள் உடலை வாங்க மறுத்து விட்டனா்.

இதுகுறித்து ஆகாஷின் பெற்றோா் கூறியதாவது:

எங்களது மகன் ஆகாஷை விசாரணை என்ற பெயரில் போலீஸாா் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கற்களை வைத்து அடித்து உடைத்துள்ளனா்.

மேலும், ஜாதி ரீதியாக பேசியும் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதன் காரணமாக அவா் உயிரிழந்தாா். எங்களது மகன் தவறு செய்திருந்தால், அதற்கு தூக்குத் தண்டனைகூட அளித்திருக்கலாம்.

இதுபோன்று அடித்துக் கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனா்.