ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் தினமும் நிலவேம்புக் குடிநீர் விநியோகம்

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்புக் குடிநீர் தினமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை  நீதிபதி  ஏ.கயல்விழி  தெரிவித்தார்.  
Updated on
1 min read

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்புக் குடிநீர் தினமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை  நீதிபதி  ஏ.கயல்விழி  தெரிவித்தார்.  
    ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட சுகாதாரத்துறை ஆகியன இணைந்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்திருந்தன.
 அதன்படி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி துவக்கி வைத்து  பேசியதாவது:  நிலவேம்புக் குடிநீர் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அது மட்டுமில்லாமல் பல்வேறு நோய்களுக்கும் அது சிறந்த மருந்தாகும். காய்ச்சலுக்கு மட்டும் தான் நிலவேம்புக் குடிநீர் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
     வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்புக் குடிநீர் தினமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
  நிகழ்ச்சியில் தலைமைக் குற்றவியல் நீதிபதி டி.வி.அனில்குமார், மாவட்ட உரிமையியல் நிதிமன்ற  நீதிபதி  கே.எஸ்.ராஜேஷ்குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பார்த்தீபன், சித்த மருத்துவர்கள் சுஜாதா,புகழேந்தி உள்பட வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com