கமுதி குண்டாற்றில் மண் சரிந்து 11-ம் வகுப்பு மாணவன் செவ்வாய்கிழமை பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வலையபக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிமுத்து மகன் முனியசாமி (17) . இவர் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முனியசாமி செவ்வாய்கிழமை மாலை பள்ளி முடிந்து கமுதி குண்டாறு பகுதியில் உறவினரின் தேவைக்காக சாக்குப் பையில் மணல் அள்ள சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முனியசாமி மீது மண் சரிந்து விழுந்ததில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து முனியசாமியின் தாயார் பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






