பரமக்குடி அருகே உள்ள பா.இலந்தைக்குளம் கிராமத்தில், குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சார்-ஆட்சியர் பி. விஷ்ணுசந்திரனிடம் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, பாதிக்கப்பட்டுள்ள பா.இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி ராஜாமணி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எனது குடும்பம் மற்றும் எனது மூத்த சகோதரி முத்துலெட்சுமி, தம்பி ராஜரெத்தினம் ஆகியோர் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை முடிக்கும் நோக்கில், கிராமத்திலுள்ள கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்வதாக, பரமக்குடி வட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முன்பு சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அக்கிராமத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்துவரும் சிவனு மகன் பாண்டி, சண்முகம் மகன் மனோகரன், கணேசன் மகன் முருகன், பெரியகண்ணன் மகன் கருப்பையா, சித்திரவேல் மகன் சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து, ஊர் மக்களை மிரட்டி பாலில் சத்தியம் வாங்கி, யாரும் எங்கள் குடும்த்துடன் பேசக்கூடாது எனக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து, கட்டப் பஞ்சாயத்து என்ற பெயரில் மனித உரிமை மீறும் செயல்களில் ஈடுபட்டு, எங்களது குடும்பத்துக்கு தொந்தரவு அளித்து வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது

கரூரில் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பிளஸ் 2 மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மே 18-இல் தொடக்கம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
