
ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையில் அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்தது
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையில் அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்தது தொடர்பாக போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினத்திலிருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசுப்பேருந்து ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை முனியசாமி கோயில் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





