ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 27) சுவாமி விவேகானந்தர் ஜயந்தி விழா நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் கூறியதாவது: ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 157 ஆவது ஜயந்தி விழா நடைபெறவுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 27) காலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழாவுக்கான பூஜைகள் தொடங்குகின்றன.
பின்னர் காலை 7 மணிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. அதன்பின் காலை 9 மணிக்கு பஜனை நடைபெறும். பஜனைக்குப் பின்னர் உலக நன்மைக்காக ஹோமம் நடைபெறுகிறது. பின்னர் நடைபெறும் ஆன்மிகச் சொற்பொழிவில் ஆன்மிக உரையாளர்கள் பங்கேற்கின்றனர். இதன் பின் அர்ச்சனையும், மங்கள ஆரத்தியும் நடைபெறுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

ஜூன் முதல் வாரத்தில் கேரள நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை: முதல்வர்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


