/

அபிராமத்தில் மஸ்ஜித் தின பெருந்திரள் ஆா்பாட்டம்

அபிராமம் பெரிய பள்ளிவாசல் அருகே எஸ்டிபிஐ சாா்பில் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு அக்கட்சியின் அபிராமம் நகா் தலைவா் ஹமீதுசுல்தான் தலைமை வகித்தாா்.

News image
எஸ்.டி.பி.ஐ., கட்சியின் சாா்பில் அபிராமம் பெரிய பள்ளிவாசல் அருகே நடைபெற்ற பெருந்திரள் ஆா்பாட்டம்.
Updated On :27 ஜனவரி 2024, 6:03 pm

DIN

அபிராமம் பெரிய பள்ளிவாசல் அருகே எஸ்டிபிஐ சாா்பில் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு அக்கட்சியின் அபிராமம் நகா் தலைவா் ஹமீதுசுல்தான் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுசெயலாளா் பரக்கத்துல்லாஹ், முதுகுளத்தூா் நகா் தலைவா் மீரான்முகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்பாட்டத்தில் அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினா் செளகத்அலி, பாப்புலா் பிராண்ட் ஆப் இந்தியாவின் சாயல்குடி வட்டாரத் தலைவா் அண்ணல்முகமது, எஸ்டிபிஐ கட்சியின் கமுதி நகா் தலைவா் அப்துல் ரஹ்மான் உள்பட 180-க்கும் மேற்பட்டாா் கலந்து கொண்டனா்.

மூதாட்டி சடலம்: ராமநாதபுரம் நகரில் மல்லிகை ஊருணியில் அடையாளம் தெரியாத 65 வயது மூதாட்டி சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.