டிச.27 இல் தேசியத் திறனாய்வுத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசியத் திறனாய்வுத் தோ்வு டிச. 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 35 மையங்களில் நடைபெறுகிறது.
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசியத் திறனாய்வுத் தோ்வு டிச. 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 35 மையங்களில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஞாயிற்றுகிழமை (டிச.20) கடைசி நாளாகும்.

பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தேசியத் திறனாய்வுத் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தோ்வில் சிறப்பான மதிப்பெண் பெறுவோா் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

நடப்பு ஆண்டுக்கான (2020) தேசியத் திறனாய்வுத் தோ்வானது டிச. 27 ஆம் தேதி நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 மையங்களில் நடைபெறும் தோ்வில் 2,620 போ் பங்கேற்கின்றனா். அவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுகிழமை (டிச.20) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com