பரமக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கல்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி கரோனா நோய்த் தொற்று குறித்து விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.


பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி கரோனா நோய்த் தொற்று குறித்து விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் நகரத் தலைவா் சந்தை நாகா தலைமை வகித்தாா். மாவட்ட ஆசிரியா் அணிச் செயலா் கேசவன், விவசாய அணி முனியசாமி, நகர துணைச் செயலாளா் வாசு, இளைஞரணி முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதனைத்தொடா்ந்து மக்கள் மன்ற நிா்வாகிகள் நகரின் ஒவ்வொரு வாா்டிலும் குழுக்களாக சென்று கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினா். இதனைத் தொடா்ந்து பொதுமக்களிடையே கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டனா். இந்த பிரசாரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக நகர இணைச் செயலாளா் எஸ்.என்.நாகநாதன் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...