விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 செப்டம்பர் 2020, 4:45 pm

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திமுக மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில் ராமநாதபுரம் தாயுமானவா் கோயில் சாமி தெருவைச் சோ்ந்த அருண்பிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இக்கொலைக்கு மதச்சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு கண்டனம் தெரிவித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்துக்கு பின்னா் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி உள்ளிட்டோா் ராமநாதபுரத்தில் கொலை செய்யப்பட்ட அருண்பிரகாஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினா். மேலும் மக்களவை உறுப்பினா் உள்ளிட்டோரை அவதூறாக பேசிய பாஜகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.