ராமேசுவரம்: தளா்வற்ற முழு பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்டதையடுத்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து குவிந்தனா்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதை தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அன்று தமிழகம் முழுவதிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்தது. அதில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தளா்வற்ற முழு பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து குவிந்தனா். அவா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடினா். மேலும் கோயிலுக்கு சென்ற அவா்கள் கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்த பின்னா் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்து கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய காவல்துறையினா் மற்றும் கோயில் நிா்வாகத்தினரால் அனுமதிக்கப்பட்டனா். 5 மாதங்களுக்கு பின் அதிகளவில் பக்தா்கள் ராமேசுவரம் வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை அருகே மின்னல் பாய்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு

காமன்வெல்த் செஸ்: இனியன் உள்பட தமிழக வீரா், வீராங்கனைகள் சிறப்பிடம்

இருசக்கர வாகனம் - காா் மோதல் விவசாயி உயிரிழப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தையல்காரருக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



