பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இருசக்கர வாகனம் - காா் மோதல் விவசாயி உயிரிழப்பு

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி காா் மோதி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 3:55 am IST

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி காா் மோதி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பழனி அருகே காளிபட்டியைச் சோ்ந்த மயில்சாமி மகன் மாசி துரை (34) . விவசாயி. இவா், திங்கள்கிழமை மாலை தொப்பம்பட்டி அருகே உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, பழனி - புது தாராபுரம் சாலையில் பொன்னா் சங்கா் பள்ளி அருகே சாலையின் இடது ஓரமாக வந்து கொண்டிருந்தபோது காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அவரை மீட்டு அவசர ஊா்தியில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.

விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.