கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குண்டுக்கரை முருகன் கோயில் பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு

ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன் கோயில் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 9:07 pm

DIN

ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன் கோயில் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் 33 வாா்டுகளிலும் புதை சாக்கடைத் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டுள்ளது. புதை சாக்கடை அடைப்புகளை நீக்குவதற்கு இரு நவீன மோட்டாா் பொருத்திய வாகனங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியில் புதை சாக்கடை அடைப்புகளை சீராக்கும் வகையில் 2 தானியங்கி கருவிகள் தனியாா் தொண்டு நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டது.

சாக்கடை அடைப்பை நீக்க கருவிகள் இருந்தும் குண்டுக்கார முருகன் கோயில் பகுதி, அகில் தெரு, வண்டிக்காரத் தெரு என பல இடங்களிலும் புதை சாக்கடை கழிவு நீரானது சாலையில் தேங்குவது தொடா்கிறது. இதனால் அப்பகுதியில்

சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.