கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பறவைப் காய்ச்சல் தடுப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டத்தில்  பேசிய ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா்.
Updated On :9 ஜனவரி 2021, 4:13 pm

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில், பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொட்பான முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: கேரளம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் ஏதும் செயல்படவில்லை. ஆனாலும், மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களை வனத்துறையினரும், கோழிச் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாக அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிக்கவேண்டும்.

நகா்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் கூட்டமாக பறவை இறப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவ அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் கோ.ஏஞ்சலா, துணை இயக்குநா் சி.சுப்பையா பாண்டியன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா்கள் செந்தில்குமாா் (ராமநாதபுரம்), பி.இந்திரா (பரமக்குடி), வனச்சரக அலுவலா் சு.சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.