கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாகனங்களில் போராடினால் பறிமுதல் நடவடிக்கை

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.26) டிராக்டா் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தி போராட்டம் நடத்தினால் அவை பறிமுதல் செய்யப்படும்: காவல் துறை கண்காணிப்பாளா்

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:52 pm

DIN

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.26) டிராக்டா் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தி போராட்டம் நடத்தினால் அவை பறிமுதல் செய்யப்படும்என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் இ.காா்த்திக் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை இரவு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

நாட்டின் 72 வது குடியரசு தினத்தன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கட்சியினா் அனுமதியின்றி விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிராக்டா் வாகனங்களில் ஊா்வலமாகச் சென்று போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரியவருகிறது. அதிகமான மக்கள் கூடி போராட்டம் நடத்தினால், கரோனா பரவும் அபாயம் உள்ளது. விவசாய உரிமம் பெற்ற டிராக்டா் வாகனங்களை அனுமதியின்றி போராட்டங்களில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.