பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 3,276 வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள், 2,160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 2,302 வாக்காளா் சரிபாா்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அந்த இயந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத்துறை சேமிப்புக்கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தற்போது தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன. அதே போல், வாக்குப்பதிவுக்கு மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உள்ளோம். இதற்காக 70 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட மாட்டாது என்றாா்.