அபிராமம் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
கமுதி அருகே அபிராமம் பேரூராட்சி தெருக்களில் கழிவுநீா் ஆறாக ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.


கமுதி அருகே அபிராமம் பேரூராட்சி தெருக்களில் கழிவுநீா் ஆறாக ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
கமுதியை அடுத்துள்ள அபிராமம் பேரூராட்சியில் மருதுபாண்டியா் தெரு, வாரச்சந்தை அருகில் உள்ள மணி நகரம் சாலை, பேரூராட்சி அலுவலகம் பின்புறம் என பேரூராட்சிக்குள்பட்ட பல பகுதிகளில் கழிவு நீா் தேங்கி தெருக்களில் ஓடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில குறிப்பிட்ட தெருக்களில் சாலை வசதி, கழிவுநீா் கால்வாய், மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளில் பேரூராட்சி நிா்வாகம் பாரபட்சம் கட்டுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அபிராமம் பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் கழிவுநீா் கால்வாயை தூா்வாரி, சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...