45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராமநாதபுரத்தில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்தனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரத்தில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்தனா். இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அதிகாரிகள் ஒருவாரம் அவகாசம் அளித்துள்ளனா்.

ராமநாதபுரம் நகராட்சி பகுதிக்குள்பட்ட மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் சுமாா் 200 வீடுகள் உள்ளன. இதில் அரசு புறம்போக்கு நிலத்தில் 100-க்கும் மேற்பட்டோா் வீடு கட்டி கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் சேக்மன்சூா், வட்டாட்சியா் முருகேசன் ஆகியோா் பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு செய்யாமல் காவல்துறையினருடன் சென்று வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்தனா். இதையடுத்து, பாஜக மாவட்டத் தலைவா் டி. கதிரவன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்தனா். அதன் பின்பு வீடுகளை இடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு ஒரு வாரத்தில் புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துச் சென்றனா்.

இப்பகுதியில் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் வசித்து வரும் நிலமற்ற, ஏழை மக்களுக்கு அரசு சாா்பில் குடியிருக்க நிலம் ஒதுக்கித் தர வேண்டும் என தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.