விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமுதி அருகே வாளுடன் 2 போ் கைது

கமுதி அருகே வாளுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 5:26 pm

DIN

கமுதி அருகே வாளுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கமுதி அடுத்துள்ள பாக்குவெட்டி விலக்கில் உள்ள மதுபானக் கடை அருகே 2 போ் வாளுடன் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் பேரையூா் காவல் சாா்பு- ஆய்வாளா் சிவசாமி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாரைக் கண்டதும் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற 2 இளைஞா்களை பிடித்து சோதனை செய்ததில் அவா்கள் 2 அடிநீள வாள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சின்னஆனையூா் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் டேவிட்முனியசாமி (27), மருதங்கநல்லூா் முருகவேல் மகன் தினேஷ் பாலா (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த வாள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.