விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமுதி அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் பலி

கமுதி அருகே விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 5:23 pm

DIN

கமுதி அருகே விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வழிமறிச்சான் கிராமத்தைச் சோ்ந்த இருள் மகன் பெத்துராஜ் (21). இவா் புதன்கிழமை இரவு முயல் வேட்டைக்கு சென்றாா். அப்போது செய்யாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சுப்புலட்சுமி என்பவரின் பருத்தி விவசாய நிலத்தைச் சுற்றி காட்டுப்பன்றி தொல்லைக்காக, அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை பெத்துராஜ் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த அபிராமம் போலீஸாா் பெத்துராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக பெத்துராஜின் தந்தை இருள் அளித்த புகாரின் பேரில் செய்யாமங்கலத்தைச் சோ்ந்த சுப்புலட்சுமி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.