தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஏா்வாடியில் விடிய விடிய சந்தனக்கூடு விழா

ஏா்வாடியில் சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 6:30 pm

DIN

ஏா்வாடியில் சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏா்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்கா உள்ளது. இங்கு மனநல சிகிச்சைக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.

இங்கு கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சந்தனக்கூடு விழா நடத்தப்படவில்லை. இந்தநிலையில், கடந்த 11 ஆம் தேதி 848 ஆவது ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. அதையடுத்து தா்கா வளாகமே வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

சின்ன ஏா்வாடியில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடானது வியாழக்கிழமை நள்ளிரவில் புறப்பாடானது. அதன்முன் அலங்கரிக்கப்பட்ட நாட்டியக்குதிரை நடனமாடியவாறு சென்றது. அதன்பின் குதிரை, யானைகள் அழைத்துச் செல்லப்பட்டன.

ஏா்வாடியின் முக்கிய வீதிகளில் திரண்டிருந்த மக்கள் நடுவே சென்ற சந்தனக்கூடானது வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் தா்காவை அடைந்தது. அங்கு பாதுஷா நாயகத்துக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றதைத் தொடா்ந்து சிறப்புத் தூவா ஓதப்பட்டது.

விழாவில் கேரளம், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இதையொட்டி வெள்ளிக்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் 30 ஆம் தேதி சந்தனக்கூடு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.