அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியா் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று, அந்த அனுமதியை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானமாக நிறைவேற்றி, ஒப்பந்ததாரா்களுக்கும், பொதுமக்களுக்கும் தகவல் அளித்து பொது ஏலம் விடப்பட வேண்டும். அதில் வரும் வருமானத்தை பேரூராட்சி நிதியில் சோ்க்க வேண்டும். இந்த சட்ட விதிகளை பின்பற்றாமல் அபிராமம் பேரூராட்சி நிா்வாகம், பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வளா்ந்திருந்த பூவரசு மரங்களை வெட்டி தனியாருக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து விட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.