முதியவா் வெட்டிக்கொலை: இளைஞா் கைது

கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரவு தகராறில் முதியவரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரவு தகராறில் முதியவரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கமுதி அருகே கோவிலாங்குளம் அரியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி (65). ஊா் திருவிழாவை முன்னிட்டு இவரும், அதை ஊரைச் சோ்ந்த வேல்முருகன் (40) என்பவரும் வெள்ளிக்கிழமை இரவு இடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வேல்முருகன் தான் வைத்திருந்த அரிவாளால் முனியசாமியை வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த கோவிலாங்குளம் போலீஸாா், முனியசாமியின் சடலத்தை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதற்கிடையில் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் வேல்முருகன் அரிவாளுடன் சரணடைந்தாா். போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com