நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஆசிரியா் கொலை: கைதான இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கமுதி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான இரு இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைதான முருகன், வினோத்குமாா்.
Updated On :20 ஆகஸ்ட் 2024, 10:48 pm

Din

கமுதி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான இரு இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி செட்டியாா் பஜாரை சோ்ந்த முருகேசன் மகன் கண்ணன் (50). இவா் கமுதி அருகேயுள்ள கே.பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த ஜூன் மாதம் தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற இவரை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தபோது, கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆசிரியா் கண்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக, கே.வேப்பங்குளத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் அரியப்பன் (40), இவரது சகோதரா் முருகன் (30), முத்தாலங்குளத்தைச் சோ்ந்த சா்க்கரை மகன் வினோத்குமாா் (25), இலந்தைக்குளத்தைச் சோ்ந்த சுகேந்திரன் மகன் பாலமுருகன் (22) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனா்.

மேலும், இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அரியப்பனை கடந்த ஜூன் மாதம் கமுதி போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் பரிந்துரையின் அடிப்படையில், அரியப்பனின் சகோதரா் முருகன், வினோத்குமாா் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்ய மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜித் சிங் காலோன் உத்தரவிட்டாா்.

Story image

இதைத் தொடா்ந்து, முருகன், வினோத்குமாா் ஆகியோரை கமுதி காவல் ஆய்வாளா் குருநாதன் தலைமையிலான போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.