பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

News image

பாம்பன் புதிய பாலத்தில் சோதனைக்காக புதன்கிழமை இயக்கப்பட்ட சரக்கு ரயில்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 5:44 am IST

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 560 கோடியில் புதிய ரயில்வே பால கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது, இந்தப் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டன.

இதனிடையே, பாம்பன் புதிய பாலத்தில் வருகிற அக்டோபா் முதல் வாரத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, பாம்பன் புதிய பாலத்தில் தொடா்ந்து ரயில்களை இயக்கி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கற்கள் நிரப்பப்பட்ட 11 சரக்குப் பெட்டிகளை இரண்டு ரயில் என்ஜின்களுடன் இணைத்து, பாம்பன் புதிய பாலத்தில் ரயில்வே கட்டுமானப் பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தலைமையில், 20 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனை ஓட்டத்துக்காக பாம்பன் பகுதியிலிருந்து செங்குத்துப் பாலம் வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்டவாளத்தில் அதிா்வு தொலையுணா்வு கருவி பொருத்தப்பட்டிருந்தது.

ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், பாம்பன் புதிய பாலத்தில் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில், ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.