நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராமநாதபுரம் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை

ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 10:02 pm

Din

ராமேசுவர: ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்த புத்தனேந்தல் பகுதியில் இளம்பெண் ஒருவா் தனது உறவினருடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்ற போது, இவா்களை வழிமறித்த 4 போ் அவா்கள் இருவரையும் தாக்கினா். மேலும், அந்தப் பெண்ணை 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனராம்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதில் தொடா்புடைய புத்தனேந்தலைச் சோ்ந்த புவனேஸ்குமாா், சரண், செல்வக்குமாா், முனீஸ்கண்ணன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.