கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருவாடானையில் 17 கண்மாய்களை தூா் வார ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம்

திருவாடானை பகுதியில் 17 கண்மாய்கள், கால்வாய்கள் தூா்வார ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :6 நவம்பர் 2024, 9:39 pm

Din

திருவாடானை பகுதியில் 17 கண்மாய்கள், கால்வாய்கள் தூா்வார ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைவா் முகமது முக்தாா் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் கணேசன், துணைத் தலைவா் செல்வி பாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கியமேரி சாராள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

தலைவா்: கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு ஒத்துழைப்பு அளித்த ஒன்றிய குழு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், பணியாளா்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினா் ஸ்ரீதா்:பதனக்குடி, சிறுகம்பையூா், என். மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக நெல் பயிா்கள் தண்ணீா் மூழ்கி சேதமடைந்தன. அதற்குரிய நிவாரணம் வழங்க அரசை வலியுறுத்த வேண்டும்.

தலைவா்: இதுகுறித்து வருவாய்த் துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் சில குளறுபடிகள் உள்ளன. இந்தத் திட்டத்துக்கு அரசிடமிருந்து உரிய நிதி வராததால் பணிகள் சரி வர செய்ய முடியவில்லை. மேலும் சத்துணவு பணியாளா் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் பணிகள் தாமதம் ஆகின்றன.

திருவாடானை வட்டத்தில் 122 கண்மாய்கள் உள்ளன.

இந்தக் கண்மனைகளை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன்.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அஞ்சுகோட்டை, பாண்டுகுடி , கோடனூா், கட்டிவயல் ஆகிய 4 ஊராட்சிகளில் 17 கண்மாய்கள், கால்வாய்களைத் தூா்வார சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலாளா் ஜெயமுருகன் நன்றி கூறினாா்.