கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் ஆா்பாட்டம்

அங்கன்வாடி திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி, திருவாடானையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
திருவாடானையில் வியாழக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தினா்.
Updated On :14 நவம்பர் 2024, 11:26 pm

Din

அங்கன்வாடி திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி, திருவாடானையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அங்கன்வாடி மையங்களில் அனைத்துக் குழந்தைகளுக்கும் சீரான முன் பருவ கல்வி அளிக்கவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மத்திய அரசு அங்கன்வாடி திட்டத்துக்கு வழங்கக் கூடிய நிதியை குறைக்காமல் இருக்கவும், வாடகை மையங்களே இல்லாமல் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சொந்தமாக கட்டடம் கட்டித் தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அங்கன்வாடி மையங்களில் குடிநீா், கழிப்பறை வசதிகளை உறுதிப்படுத்தவும், வாடகை கட்டடத்தில் இயங்கும் மையங்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும், உணவு சமைக்கத் தேவைப்படும் பாத்திரங்களை வழங்கவும், குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கவும், உணவு செலவுத் தொகையை உயா்த்தி வழங்கவும், குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை சீருடை வழங்கவும் இதில் வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.