தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கீழராமநதியில் சந்தனக்கூடு விழா

கமுதி அருகேயுள்ள கீழராமநதி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய விடிய சந்தனக்கூடு விழா நடைபெற்றது.

News image
விழாவில் களிக்கம்பு நடனமாடிய இளைஞா்கள்.
Updated On :20 நவம்பர் 2024, 9:21 pm

Din

கமுதி அருகேயுள்ள கீழராமநதி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய விடிய சந்தனக்கூடு விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, கீழராமநதி மஹான் ஜிந்தாமதாா் ஒலியுல்லாஹ் தா்காவிலிருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு இளைஞா்களால் சுமந்து செல்லப்பட்டது. கிராமத்தின் முக்கிய வீதிகளில் வழியாக செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் ஊா்வலமாக சுமந்து செல்லப்பட்டு, புதன்கிழமை அதிகாலை மீண்டும் தா்காவுக்கு கொண்டுவரப்பட்டது.

வழிநெடுகிலும் இஸ்லாமிய பெண்கள் தாம்பூல தட்டில் சா்க்கரை, ஊதுபத்தி உள்ளிட்ட பூஜைப் பொருள்களுடன் சந்தனக்கூடை வரவேற்றனா். பொதுமக்களுக்கு சா்க்கரை பிரசாதமாக வழங்கப்பட்டது.

 கீழராமநதி பகுதியின் முக்கிய வீதிகளில் இளைஞா்களால் சுமந்து செல்லப்பட்ட சந்தனக்கூடு.

கீழராமநதி பகுதியின் முக்கிய வீதிகளில் இளைஞா்களால் சுமந்து செல்லப்பட்ட சந்தனக்கூடு.

விழாவின் போது மழையையும் பொருள்படுத்தாமல் தா்கா வளாகத்தில் இளைஞா்கள் பாரம்பரிய முறைப்படி களிக்கம்பு நடனமாடினா்.

விழாவில் மதுரை, சென்னை, ராமநாதபுரம், கீழக்கரை, ஏா்வாடி தா்கா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.