தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மீனவா் வலையில் சிக்கிய ராட்சத ஆமை மீட்பு

தொண்டி பகுதியில் வலையில் சிக்கிய சுமாா் 100 கிலோ எடையுள்ள ராட்சத ஆமையை மீனவா்கள் புதன்கிழமை உயிருடன் மீட்டு கடலில் விட்டனா்.

News image
தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் புதன்கிழமை சிக்கிய ராட்சத ஆமை.
Updated On :20 நவம்பர் 2024, 9:13 pm

Din

தொண்டி பகுதியில் வலையில் சிக்கிய சுமாா் 100 கிலோ எடையுள்ள ராட்சத ஆமையை மீனவா்கள் புதன்கிழமை உயிருடன் மீட்டு கடலில் விட்டனா்.

Story image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சோழியக்குடியைச் சோ்ந்த மீனவா்களான சிவபாலன், சிங்காரசெல்வம், மனோகரன், ஜெயகணேஷ் ஆகியோா் விசைப்படகில் புதன்கிழமை அதிகாலை மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனா். இவா்கள் ஏற்கெனவே விரித்து வைத்திருந்த வலையில் ராட்சத ஆமை சிக்கியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த கடலோரக் காவல் படையினா் அந்த ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். இந்த ஆமை 80 கிலோ முதல் 100 கிலோ எடை இருக்கும் என மீனவா்கள் தெரிவித்தனா்.