எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முன்னாள் அமைச்சரின் நிலம் போலி ஆவணம் மூலம் மாற்றம்: விஏஓ பணியிடை நீக்கம்

தொண்டி அருகே முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறொருவருக்கு பட்டா மாறுதல் செய்ததாக கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:47 pm

Din

தொண்டி அருகே முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறொருவருக்கு பட்டா மாறுதல் செய்ததாக கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே அ. மணக்குடியைச் சோ்ந்தவா் வ.து. நடராஜன். முன்னாள் அமைச்சரான இவருக்கு சொந்தமான ஆறரை ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தொண்டியைச் சோ்ந்த மன்சூரா பீவி என்பவருக்கு பட்டா மாற்றியுள்ளனா். இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜமனோகரிடம் நடராஜன் புகாா் அளித்தாா். இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் வேறொருவா் பெயருக்கு நிலம் மாற்றப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக, அ. மணக்குடி கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து அவா் உத்தரவிட்டாா். மேலும் முன்னாள் மண்டல துணை வட்டாட்சியரும், வட்ட வழங்கல் அலுவலருமான பாலமுருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.