மணல் கடத்தியவா் கைது
ராமநாதபுரம் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :5 செப்டம்பர் 2024, 7:06 pm

ராமநாதபுரம் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டணம் பகுதியில் அம்மாரி கிராமத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக தேவிபட்டணம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷூக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்றபோது, மணல் ஏற்றப்பட்ட டிராக்டா் வந்தது. போலீஸாா் அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனா். அதிலிருந்த இருவா் தப்பிச் சென்ற நிலையில், வெள்ளச்சாமி (24) என்பவரைக் கைது செய்தனா். மேலும், டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பிச் சென்ற ராஜா (32), சபரி (26) ஆகியோரைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...