ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.82 கோடி
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ. 1.82 கோடி கிடைத்தது.


ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ. 1.82 கோடி கிடைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி பழைய திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் தலைமையில் செவ்வாய்கிழமை காலை தொடங்கியது. அன்றைய தினம் இரவு 10 மணி வரை நடைபெற்றது.
இதில் ரூ.1 கோடியே 82 லட்சத்து 98 ஆயிரத்து 792 , தங்கம் 88 கிராம் , வெள்ளி 7 கிலோ 750 கிராம், அயல்நாட்டு பணத் தாள்கள் 142 பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக கிடைத்தது.
உதவி ஆணையா் பாஸ்கரன், ஆய்வா் பிரபாகரன், மேலாளா் மாரியப்பன், பேஷ்காா்கள் கமல்நாதன், பஞ்சமூா்த்தி, நாகராஜன், முனியசாமி எடப்பாடி உழவாரப்பணி ஆன்மிக குழுவினா், கோயில் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...