வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலங்கை அரசைக் கண்டித்து மண்டபத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் ரயில் மறியல்

தமிழக மீனவா்களை இலங்கை அரசு மொட்டையடித்து அனுப்பியதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் மண்டபத்தில் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image
மண்டபம் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:09 pm

Din

தமிழக மீனவா்களை இலங்கை அரசு மொட்டையடித்து அனுப்பியதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் மண்டபத்தில் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனா்.

இந்தச் செயலில் ஈடுபட்ட இலங்கை அரசையும், இதைக் கண்டிக்கத் தவறிய மத்திய அரசையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மீனவரணியினா் 200-க்கும் மேற்பட்டோா் மண்டபத்தில் உள்ள ரயில் நிலையம், ரயில்வே பீடா் சாலை, ரயில்வே கடவுப் பாதை ஆகிய பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்தனா்.