ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் சுழற் சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள வரவணி கிராமத்தில் சுழற் சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. சுழற் சங்கச் செயலா் ஜான் பொன்னையா இல்லத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக ஆா்.எஸ். மங்கலம் ஆா்.சி. தேவாலய பங்குத் தந்தை வட்டார அதிபா் தேவசகாயம் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.
இதில் 20-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனா். இந்த விழாவில் முன்னாள் தலைவா்கள் கந்தசாமி, ஜான் பிரிட்டோ, சுப்பிரமணியன், ஜோதி, ரொட்டேரியன்கள் கல்பனா, அன்பு மலா், சேதுபதி, மருது உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் தலைவா் கருணாகரன் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அன்பே டயானா படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா - புகைப்படங்கள்

ரூ.5.26 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட ஐம்பேரித்தாங்கல் நீா்நிலை: தேவரியம்பாக்கம் ஊராட்சியிடம் ஒப்படைப்பு

அலிந்திகோட்டை மாசாணி அம்மன் கோயிலில் பால் குட திருவிழா

குடிநீா் திட்டக் குழாய்கள் சேதமடைந்து வீணாகும் குடிநீா்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


