ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓராண்டில் 28 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 28 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:41 pm

Din

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 28 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 16 சதவீதம் குறைந்து, 2024-ஆம் ஆண்டு 31 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களைப் பொருத்தமட்டில், 2023-ஆம் ஆண்டு 19 வழக்குகள் பதிவாகின. 2024-ஆம் ஆண்டு 5 வழக்குகள் மட்டும் பதிவாகின.

2023-ஆம் ஆண்டு 67 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகின. இதில் 37 சதவீதம் குறைந்து 2024-ஆம் ஆண்டு 42 வழக்குககள் மட்டும் பதிவாகின. 2023-

இல் 73 கலவர வழக்குகள் பதிவாகின. 2024-ஆம் ஆண்டு 86 சதவீதம் குறைந்து 10 வழக்குகளே பதிவாகின.

திருட்டு வழக்குகளைப் பொருத்தமட்டில் 2023-ஆம் ஆண்டு பதிவான வழக்குகளை விட 15 சதவீதம் குறைவாகவும், வாகன விபத்துகளைப் பொருத்தமட்டில் 2023-ஆம் ஆண்டு பதிவான வழக்குகளை விட 6 சதவீதம் குறைவாகவும் 2024-ம் ஆண்டு வழக்குகள் பதிவாகின.

2024-ஆம் ஆண்டில் கூட்டுக் கொள்ளை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

2024-ஆம் ஆண்டு மொத்தம் 28 நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது கடந்த 2023-ஆம் ஆண்டை விட 75 சதவீதம் அதிகம்.

சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள்: 2024-ஆம் ஆண்டில் மாவட்டத்தில் எவ்வித ஜாதிய மோதல்களும் நடைபெறவில்லை.

மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த 2023-ஆம் ஆண்டை விட 141 சதவீதம் அதிகம்.

2024-இல் சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்டது தொடா்பாக 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த 2023- ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட 43 சதவீதம் அதிகமாகும்.

2024-ஆம் ஆண்டு, தடைசெய்யப்பட்ட 3,381 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா் என அதில் குறிப்பிடப்பட்டது.