இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ராமேசுவரத்தில் 1,000 பனை விதைகள் நடவு

News image
Updated On :6 நவம்பர் 2025, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 1,000 பனை விதைகளை வியாழக்கிழமை நடவு செய்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கே.ராஜேஷ் தலைமை வகித்து, பனை விதைகள் நடவைத் தொடங்கிவைத்தாா்.

ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலிலிருந்து தனுஷ்கோடி செல்லும் சாலை வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் 1,000 பனை விதைகளை மாணவா்கள் நடவு செய்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் செல்வக்குமாா், இளையோா் செஞ்சிலுவை சங்க உறுப்பினா் தினகரன், தொழில்கல்வி ஆசிரியா் பழனிச்சாமி, முதுநிலை ஆசிரியா் பாலமுரளி ஆகியோா் செய்தனா்.