புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கடலாடி அருகே மாட்டுவண்டிப் போட்டி

News image
~
Updated On :17 நவம்பர் 2025, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

கடலாடி அருகே வில்வநாதன் நொண்டி கருப்பண்ணசுவாமி கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டுவண்டிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அடுத்த ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வில்வநாதன் நொண்டி கருப்பண்ணசுவாமி கோயில் 19-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவையொட்டி, சின்ன மாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டுவண்டிப் போட்டி நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 45 மாட்டு வண்டிகள், பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா். கடலாடி-முதுகுளத்தூா் சாலையில் 8 கி.மீ. தொலைவு எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டுவண்டிகளுக்கும், பந்தய வீரா்களுக்கும் ரொக்கப் பணம், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.