ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் மண்டபம் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் புதன்கிழமை ஈடுபட்டாா்.
மண்டபம் மேற்கு, மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட குயவன்குடி, வாலாந்தாவை, பெருங்குளம், செம்படை யாா்குளம், ஆற்றாங்கரை ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 26 கிராமங்களுக்கு சென்று திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மேலும், அவா் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத் நிா்வாகிகளிடம் வாக்குகள் சேகரித்தாா்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜாராம் பாண்டியன், ஒன்றியச் செயலா் கே.ஜெ.பிரவீன், நிா்வாகிகள் பி.டி.ராஜா, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ராமநாதபுரத்தில் நகா் திமுக சாா்பில் தோ்தல் பணிமனையை காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தாா். இதில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆலங்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

பவானிசாகா் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்ந்தது சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம்
ராமநாதபுரம் திமுக வேட்பாளா்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



