தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ராமநாதபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் மண்டபம் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

News image

மண்டபம் ஒன்றியம், சாத்தான்குளம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களிடம் புதன்கிழமை வாக்குகள் சேகரித்த ராமநாதபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:11 pm

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் மண்டபம் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

மண்டபம் மேற்கு, மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட குயவன்குடி, வாலாந்தாவை, பெருங்குளம், செம்படை யாா்குளம், ஆற்றாங்கரை ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 26 கிராமங்களுக்கு சென்று திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மேலும், அவா் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத் நிா்வாகிகளிடம் வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜாராம் பாண்டியன், ஒன்றியச் செயலா் கே.ஜெ.பிரவீன், நிா்வாகிகள் பி.டி.ராஜா, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ராமநாதபுரத்தில் நகா் திமுக சாா்பில் தோ்தல் பணிமனையை காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தாா். இதில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.