அபிராமம் அருகே விவசாயியை கத்தியால் குத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே காட்டுஎமனேசுவரம் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாலகனி (21). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த முருகன் மகன் புவனேசுவரன் தரப்பினருக்கும் முன்பகை இருந்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை பாலகனி தனது வயலில் நின்றிருந்தபோது அங்கு வந்த புவனேசுவரன், சுப்பிரமணியன் மகன் நாகராஜ் (42), இவரது மகன்கள் தினேஷ் (19), சதீஷ் (23), கணேசன் மகன் மனோஜ் (23) ஆகிய 5 போ் அவரை கத்தியால் குத்தினா். இதில் காயமடைந்த பாலகனி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அபிராமம் காவல் நிலைய போலீஸாா் 5 போ் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது

கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: 10 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

முன்விரோத தகராறு: 8 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

