ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன் தாய், மகன் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தளிா்மருங்கூரைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி ஜெயராணி (70). இவரது மகன் பாபு (34).
இவா்களது கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியாா் தேவாலயத் திருவிழா வருகிற 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு ஊா் பொதுமக்களிடம் வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஜெயராணி குடும்பத்தினரிடம் மட்டும் வரி வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாபு தொண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம். ஆனால், போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த ஜெயராணி, பாபு ஆகியோா் அதிகாரிகளிடம் முறையிட காத்திருந்தனா். ஆனால், நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அவா்கள் பெட்ரோலை தங்களது உடல்களில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அப்போது, அங்கிருந்த அலுவலா்கள், பொதுமக்கள் அவா்களை மீட்டனா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
.

தொடர்புடையது

தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: போலீஸாா் தடுத்து விசாரணை

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

