ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் - கம்யூ. கட்சியினா் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:48 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் மத்திய அரசைக் கண்டித்து, வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

பாரத ஸ்டேட் வங்கி முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், பல்வேறு தொழிலாளா் சங்கங்கள் பங்கேற்றன. இந்தப் போராட்டத்துக்கு விவசாய சங்க மாவட்டத் தலைவா் முத்துராமா் தலைமை வகித்தாா் .

இதில் 44 தொழிலாளா் நலச் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றம் செய்தது, நிதி ஒதுக்கீடு தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இதைடுத்து, போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவா்களைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

Story image
Story image