ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 8:43 pm

பெரம்பலூா் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் செல்லமுத்து (55). மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா்.

இந்நிலையில், குன்னத்தில் திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் பங்கேற்ற செல்லமுத்து, பெரம்பலூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தாா். பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையிலுள்ள சித்தளி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து நேரிட்டது. இதில் பலத்த காயமடைந்த செல்லமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சித்தளி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் பரணிதரன் (22) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.