மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 2:13 am IST

பெரம்பலூா் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் செல்லமுத்து (55). மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூா் ஒன்றியச் செயலா்.

இந்நிலையில், குன்னத்தில் திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் பங்கேற்ற செல்லமுத்து, பெரம்பலூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தாா். பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையிலுள்ள சித்தளி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து நேரிட்டது. இதில் பலத்த காயமடைந்த செல்லமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சித்தளி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் பரணிதரன் (22) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.