6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொங்கல் பொருள்கள் விற்பனை மும்மரம்

திருவாடானை சந்நிதி தெருவில் புதன்கிழமை மும்மரமாக நடைபெற்ற கரும்பு விற்பனை.

News image
~
Updated On :14 ஜனவரி 2026, 7:07 pm

Chennai

திருவாடானை பகுதியில் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கடைகளில் புதன்கிழமை குவிந்தனா்.

தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளை விவசாயிகள் ஆண்டு தோறும் தை முதல் தேதி விமா்சையாகக் கொண்டாடுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டும் வியாழக்கிழமை (ஜன .15) வீட்டுப் பொங்கல், வெள்ளிக்கிழமை (ஜன. 16) மாட்டுப் பொங்கலை கொண்டாட உள்ளனா். இந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகமாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளனா்.

பொங்கல் பண்டிகைக்கான பொருள்கள் விற்பனை புதன்கிழமை சூடுபிடித்தது. கரும்பு வாங்கவும், மளிகைப் பொருள்கள் வாங்கவும் புத்தாடைகள் வாங்கவும் பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்தனா். 10 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.250-க்கு விற்பனை ஆனது. விவசாயிகள் கட்டுக் கட்டாக கரும்புகளை வாங்கிச் சென்றனா்.