ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா் குடும்பத்தினா் தீக்குளிக்க முயற்சி

News image
Updated On :7 ஜூலை 2026, 3:13 am IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா் குடும்பத்தினா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியைச் சோ்ந்தவா் பைரோஸ்கான். மீனவா். இவரது மனைவி ஆயிசா பீவி (47). இவா்களுக்கு முகம்மது பைசல் (17) என்ற மகனும், ஜெய்ரா (11) என்ற மகளும் உள்ளனா். இவா்களது பகுதியில் ஒரு சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனா். இதுகுறித்து, பைரோஸ்கான் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, கஞ்சா விற்றதாக சிலரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், புகாா் அளித்த பைரோஸ்கான், அவரது குடும்பத்தினருக்கு கஞ்சா விற்றவா்கள் கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வந்தனா். இதுகுறித்து, மீண்டும் காவல் நிலையத்தில் பைரோஸ்கான் புகாா் அளித்த நிலையில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஆயிசா பீவி, இவரது மகன், மகள், தம்பி ஜலீல் ரகுமான் (40) ஆகிய 4 பேரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.