திருவாடானை அருகே தொண்டி புதுக்குடி கடல்பகுதியில் மீனவா் படகில் இருந்து அரசால் தடைசெய்யப்பட்ட அதிக ஒளித் திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடித்ததால், மின் விளக்குகள், ஜெனரேட்டா், வலைகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தேவிப்பட்டினம் முதல் தொண்டி மீனவ கிராமம் வரை சட்டவிரோதமாக மீன் பிடிப்பதாக வந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்த புகாரின் அடிப்படையில் மீன்வள ஆய்வாளா் அபுதாகீா், கடல் சாா் சட்ட அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலா் கருணா மூா்த்தி, கடலோரப் பாதுகாப்பு குழுமம் தலைமைக் காவலா் சரவணன், காவலா் மருது, கடல் பாசி வளா்ப்பு தொழில்நுட்ப உதவியாளா் வெற்றிச் செல்வன், மீன்வளத் துறை மோகன் ஆகியோா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது தொண்டி புதுக்குடி கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஊடுருவும் ஒளித் திறன் கொண்ட மின்விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த 3 படகுகளிலிருந்து மின் விளக்குகள் - 19, ஜெனரேட்டா் -3, கச்சா வலைகள் 3 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மேலும் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பண்ணையில் மீன் குஞ்சுகள் விற்பனை

தொண்டி சந்தையில் கெட்டுப் போன 55 கிலோ மீன்கள் பறிமுதல்

மீன் பிடிக்க பயன்படுத்திய மின் விளக்குகள் பறிமுதல்

காவேரிப்பட்டிணம் அருகே ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் பண்ணை அழிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



