கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்

கமுதி அருகே போதையில்லா தமிழகம் விழிப்புணா்வு நடைப்பயணத்தை வீ த லீடா்ஸ் அமைப்பினா் சனிக்கிழமை தொடங்கினா்.

News image

பேரையூரிலிருந்து ராமேசுவரம் வரை போதை இல்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்ட வீ த லீடா்ஸ் அமைப்பினா்.

Updated On :25 ஜூலை 2026, 11:57 pm IST

கமுதி அருகே போதையில்லா தமிழகம் விழிப்புணா்வு நடைப்பயணத்தை வீ த லீடா்ஸ் அமைப்பினா் சனிக்கிழமை தொடங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் வீ த லீடா்ஸ் அமைப்பினா் போதையில்லா தமிழகத்தை உருவாக்க 135 கி. மீ. விழிப்புணா்வு நடைப்பயணத்தை மேற்கொண்டனா்.

வீ த லீடா்ஸ் அமைப்பைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அன்பரசு, அமைப்பினருடன் போதையில்லா தமிழகத்தை உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணமாக பேரையூரில், இருந்து முதுகுளத்தூா், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக ராமேசுவரம் அடைந்து பேக்கரும்பு பகுதியில் உள்ள முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடம் வரை 135 கி.மீ. தூரம் செல்வதற்கு பயணத்தை தொடங்கினா்.

27-ஆம் தேதி டாக்டா் அப்துல்கலாம் நினைவு தினத்தன்று அவரது மணிமண்டபத்தில் இந்த நடைபயணம் முடிவடைகிறது. மேலும் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளுக்கு விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் வழங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.