கமுதி அருகே போதையில்லா தமிழகம் விழிப்புணா்வு நடைப்பயணத்தை வீ த லீடா்ஸ் அமைப்பினா் சனிக்கிழமை தொடங்கினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் வீ த லீடா்ஸ் அமைப்பினா் போதையில்லா தமிழகத்தை உருவாக்க 135 கி. மீ. விழிப்புணா்வு நடைப்பயணத்தை மேற்கொண்டனா்.
வீ த லீடா்ஸ் அமைப்பைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அன்பரசு, அமைப்பினருடன் போதையில்லா தமிழகத்தை உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணமாக பேரையூரில், இருந்து முதுகுளத்தூா், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக ராமேசுவரம் அடைந்து பேக்கரும்பு பகுதியில் உள்ள முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடம் வரை 135 கி.மீ. தூரம் செல்வதற்கு பயணத்தை தொடங்கினா்.
27-ஆம் தேதி டாக்டா் அப்துல்கலாம் நினைவு தினத்தன்று அவரது மணிமண்டபத்தில் இந்த நடைபயணம் முடிவடைகிறது. மேலும் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளுக்கு விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் வழங்கிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் நாளை மின்தடை

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருச்செந்தூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

‘வி த லீடா்ஸ்’ அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படும்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



